
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்யும் தனியார்துறை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை வழங்கத் தவறும் நிறுவனங்களுக்கு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் ( MOHRE ) ஏழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதலாளிகள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்க தவறும்பட்சத்தில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட முதலாளிகள், அமைச்சகத்தின் கலா ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் மற்றும் உரிய தேதிக்கு 17 நாட்களுக்குப் பிறகு ஊதியம் வழங்கப்படாவிட்டால் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடப்படும் . அதுவே சிறிய நிறுவனங்களாக இருந்தால் பணி அனுமதி நிறுத்தப்படும் . மேலும் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் போன்ற முக்கிய ஏழு அறிவிப்புகளை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் ( MOHRE ) வெளியிட்டுள்ளது.
புதிய ஆணையின்படி அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு அபராதங்கள் :
உத்தியோகபூர்வ நினைவூட்டல்களை வழங்குதல்
பணி அனுமதி புதுப்பித்தல் நிறுத்தம்
அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு
தவறு செய்யும் உரிமையாளரின் கீழே உள்ள நிறுவனங்களுக்கு பணி அனுமதி இடைநிறுத்தம்
நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் விதிமீறல் ஏற்பட்டால் நிறுவனத்தின் தரம் குறைக்கப்படும்
பணி அனுமதிகளை இடைநிறுத்தம்
பொது வழக்கு மற்றும் அபராதங்களுக்கு பரிந்துரை

1 .உத்தியோகபூர்வ நினைவூட்டல்களை வழங்குதல்
தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டிய தேதியில் ஊதியம் வழங்கப்படாவிட்டால் ( MoHRE ) அமைப்பானது ,மூன்றாவது மற்றும் 10வது நாளுக்குப் பிறகு ஊதியம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நினைவூட்டலைச் அந்த நிறுவனங்களுக்கு அறிவிக்கும்.
2.பணி அனுமதி புதுப்பித்தல் நிறுத்தம் :
நிறுவனமானது ஊழியர்களுக்கு சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்கத் தவறும் பட்சத்தில் , அதாவது தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் சம்பளம் வழங்க தவறினால் நிறுவனம் மற்றும் தொழிலாளி பணி அனுமதி வழங்கவோ அல்லது புதுப்பிக்கவும் அந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடையாது.
3.அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு :
தனியார் துறை நிறுவனங்கள் முதலாளிகளுக்கு ஊதியம் வழங்கும் தேதிக்கு பிறகு 30 நாட்களுக்கு மேலாக ஊதியம் வழங்க தவறினால் முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக (MOHRE )அமைப்பு அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வெளியிடப்படும். ஆய்வக உதவியாளர்கள் அல்லது 500 முதல் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு எதிராக தொடங்கப்படும் என்றும், இல்லையெனில்( MOHRE ) அமைப்பானது அதிக ஆபத்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் அந்த நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி உள்ளது.
4.தவறு செய்யும் உரிமையாளரின் கீழே உள்ள நிறுவனங்களுக்கு பணி அனுமதி இடைநிறுத்தம் :
நிறுவனம் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் தேதியிலிருந்து இரண்டு மாதங்கள் ஆகியும் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் அந்த நிறுவனத்திற்கு பணி அனுமதி இடைநிறுத்தம் படும் என MOHRE அமைப்பு கூறியுள்ளது.
5.நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் விதிமீறல் ஏற்பட்டால் நிறுவனத்தின் தரம் குறைக்கப்படும் :
ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக விதிமீறல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அந்த நிறுவனம் (MOHRE) ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்படும் மற்றும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படும் .
6.பணி அனுமதிகளை இடைநிறுத்தம் :
அந்த நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் தவறும்பட்சத்தில், அந்த நிறுவனங்களுக்கு புதிய பணி அனுமதிகள் வழங்குவது நிறுத்தப்படும்.
7.பொது வழக்கு மற்றும் அபராதங்களுக்கு பரிந்துரை:
நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தேதியில் ஊதியத்தைக் கொடுக்காமல் ஆறு மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கும் நிறுவனங்களை , MoHRE ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொது விளக்கு துறைக்கு பரிந்துரைக்கும் மேலும் இந்த நிறுவனத்திற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
Comentários