top of page

தாயிஃப் அருகே வாகன விபத்தில் படுகாயமடைந்த தமிழ் குடும்பம்.

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

கடந்த 24.01.2026 அன்று காலை 06. 30 மணிக்கு நாகை மாவட்டம் வவ்வாலடி கிராமத்தை சேர்ந்த உம்ரா பயணிகள் ஆறு பேர் வந்த வாகனம் ரியாத்தில் இருந்து புனித மக்கா வரும் போது தாயிஃப் அருகில் ரித்வான் எனுமிடத்தில் விபத்து ஏற்பட்டது.


தகவல் கிடைத்தவுடன் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம், ஜித்தா மண்டல IWF துணை செயலாளர் பொறியாளர் பனங்காட்டூர் KPM அப்துல் ஹலீம் மற்றும் மருத்துவ அணி செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூல் ஆகியோர் தாயிஃப் மருத்துவமனையில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ரிதுவான் என்ற இடத்திற்கு 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து போக்குவரத்து காவல் நிலையத்தில் தேவையான வேலைகளையும், மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த அவர்களின் மகன் சார்ந்த அரசாங்க தனாசில் வேலைகளையும் உடனே முடித்துக் கொடுத்தார்கள்.


இதில் ஒரு பெண்மணிக்கு மட்டும் கால் எலும்பு முறிந்த விட்டதாலும்,மற்ற அனைவர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இன்றும் (25.01.2025) அங்கு தங்கியிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.


தகவல்:


இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்,

ஜித்தா மேற்கு மண்டலம்,

சவுதி அரேபியா.


அன்புடன் M.Siraj

39 views0 comments

Recent Posts

See All

சவுதியில் மரணம் அடைந்த தமிழரின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்த #NRT அசீர் மண்டலம்

NRT -SAUDI ARABIA Aseer chapter Non Resident Tamils Welfare Board. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா மற்றும்...

கடல் கடந்து சென்றாலும் உதவிக்கரம் கொடுக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

கடந்த 24.01.2026 அன்று தாயகத்தில் இருந்து உம்ரா வந்த நாகை மாவட்டம் வவ்வாலடி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தாயிஃப்...

Comments


bottom of page