சென்னையில் நடைபெற்ற SYPA அமைப்பு வழங்கிய 2025 ஆண்டு மனிதநேய சேவையாளர்கள் விருது இந்தியன்ஸ் வெல்பர் போரம் அமைப்பிற்கு கிடைத்துள்ளது. இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் ரியாத் மண்டல முன்னாள் தலைவர் தலைமை பிரதிநிதி ஹுசைன் கனி அவர்களும் மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்களும் மேற்கு மண்டல துணைத் தலைவர் அப்துல் சமது அவர்களும் சேர்ந்து பெற்றுக் கொண்டார்கள்.
தங்களின் சேவையை தொடர்ந்து செய்து வரும் இந்தியன்ஸ் வெல்பர் போரம் அமைப்புக்கு விருது அளித்து உற்சாகமூட்டிய SYPA அமைப்பிற்கும் அதன் நிறுவனர் பேரா. ரஃபி அவர்களுக்கும் இவ்விருதை பெற துணை நின்ற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி கூறி, மேலும் நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்றும் இது போன்ற விருதுகளை களத்திலே களமாடும் தருணத்தில் ஏற்படும் களைப்பை நீக்கி தொடர்ந்து உழைப்போம் என்று இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம், ஜித்தா மேற்கு மண்டல நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம், ஜித்தா மேற்கு மண்டலம்.
அன்புடன்: M.Siraj
留言