
அமீரகத்தின் பிரபல எழுத்தாளர் தேவா சுப்பையா அவர்களின் தந்தையார் சுப்பையா அவர்களின் நினைவு அறக்கட்டளை துவக்க விழா, படத் திறப்பு விழா மற்றும் சலஞ்சலம் சிறுகதை தொகுப்பு விழா என முப்பெரும் விழா சிவகங்கையில் 22-04-2023 அன்று நடைபெற்றது.
விழாவில் ஜெத்தா தமிழ்ச் சங்க உறுப்பினர் முனைவர் ஜெரால்டு வில்சன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிவகங்கை அஇஅதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், புதுக்கோட்டை தொழிலதிபர் செல்லப்பன், திருப்பத்தூர் ஆபிசீஅ கல்வியியல் கல்லூரி செயலர் இரமேஸ்வரன், சிவகங்கை ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சுவடு பதிப்பகம் நல்லு ஆர் லிங்கம், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா, மகிளா காங்கிரஸ் செயலாளர் ஶ்ரீவித்யா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர்.


Comments