top of page

சவுதியில் மரணம் அடைந்த தமிழரின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்த #NRT அசீர் மண்டலம்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

NRT -SAUDI ARABIA Aseer chapter Non Resident Tamils Welfare Board. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா மற்றும் #NRT அசீர் மண்டலம் சார்பாக உதவி


சவுதி அரேபியாவில் ஆசிர் மண்டலம் அபஹா அடுத்த சப்த் அல் அலையா என்ற ஊரில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சேர்ந்த திரு. குமார் பால்ராஜா (48) அவர்கள் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் குமார் பால்ராஜா 08.12.2024 அன்று இருதய நோய் ( மாரடைப்பு) காரணமாக மரணமடைந்தார். இறந்த செய்தி கேள்வி பட்டத்தின் அடிப்படையில் , அமரர் திரு. குமார் பால்ராஜா அவர்கள் உடலை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா அசீர் மண்டலம் திரு.இஸ்மாயில் உசேன், திரு.நூஹ் அப்துல்லா கான், மற்றும் திரு. ஆனந்த் தேவ துரை ஆகியோர் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


சவூதி அரேபியா அசீர் மண்டலம் காமிஸ் முஷைத் சார்பாக தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், மற்றும் கமீஸ் முஷைத் உள்ள சவூதி சுகாதார அமைச்சகம் மற்றும் சப்த் அல் அலையா காவல்துறை உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


மறைந்த திரு.குமார் பால்ராஜா அவரது உடலை தாயகம் அனுப்பி வைக்க தேவையான பொருளாதார நிலை இல்லாததால் சிரமம் ஏற்பட்டது. இதனை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் திரு. நூஹ் அப்துல்லா அவர்கள் ஆலோசித்து சவூதி அரேபியா அசீர் மண்டலம் சார்பாக உரிய நடவடிக்கை எடுத்து இந்திய அரசாங்க செலவில் அவரது உடலை கடந்த 23.01.2025 அன்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. திரு.இஸ்மாயில் உசேன் அவர்கள் இறுதி வரை அனைத்து பயண ஏற்பாடுகளை கவனித்தார்.


Non Resident Tamils NRT CHENNAI அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் ரியாத்தில் இருந்து Dr. சந்தோஷ் (Deputy Organizer NRTIA) சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்தனர்.


அன்புடன் M.Siraj



58 views0 comments

Comments


bottom of page