top of page

சவூதி அரேபியா ரியாத்தில் அயலகத் தமிழர்களுக்காக அடையாள அட்டை சிறப்பு முகாம்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

தமிழக முதல்வர் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நல திட்டங்களை சவூதி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் 300 மேற்பட்ட  தமிழக தொழிலாளர்களுக்கு அயலகத் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம். 


தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். அயலகத் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது புலம்பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. ரியாத் தமிழ்ச் சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் நலன்களுக்காக கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரியம் அமைத்தது. அதன் நீட்சியாக அயலகத் தமிழர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மே 2024 இல் அயலகத் தமிழர் நலவாரியம் அறிமுகப்படுத்தி, முதல் மூன்று மாதங்களுக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 200 ரூ கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இது குறித்து சவூதி ரியாத் தமிழ்ச் சங்கம் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், இதுவரை ஓட்டுநர்களாக, தோட்டவேலை செய்பவர்களாகப் பணியாற்றும் நானூறுக்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுத்து உதவியுள்ளது.


மேலும் கடந்த 26.07.2024 அன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நியூ செனையா பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து அதன் சுற்றுப் பகுதியில் பணிபுரியும் 300 தமிழக தொழிலாளர்களுக்கு சவூதி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பித்து கொடுத்து உதவியது.  இந்த முகாமில் சவூதி ரியாத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜாஃபர் சாதிக், செயற்குழு உறுப்பினர்கள் மாதவன், ஆரிப் அப்துல் சலாம், ஜமால் சேட், வசீம் ராஜா, முஹம்மது யூசுப் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஹைதர் அலி அவர்களின் வழிகாட்டலில், செயற்குழு உறுப்பினர் கபீர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தச் சிறப்பு முகாமை திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.


தொடர்ந்து இது போன்ற சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யவும், சமூக வலைத்தளம் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுக்கும் பணியினையும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூகச் சேவை அணி தொடர்ந்து செய்து கொடுக்கும் என்றும் ரியாத் தமிழ்ச் சங்க சமுக சேவை அணியின் தலைவர் அகமது இம்தியாஸ் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.



4 views0 comments

Recent Posts

See All

சவுதியில் மரணம் அடைந்த தமிழரின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்த #NRT அசீர் மண்டலம்

NRT -SAUDI ARABIA Aseer chapter Non Resident Tamils Welfare Board. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா மற்றும்...

கடல் கடந்து சென்றாலும் உதவிக்கரம் கொடுக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

கடந்த 24.01.2026 அன்று தாயகத்தில் இருந்து உம்ரா வந்த நாகை மாவட்டம் வவ்வாலடி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தாயிஃப்...

Comments


bottom of page