top of page

ஓமான் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள் - காரில் இருந்த ஏழு பேர்

Writer: RaceTamil NewsRaceTamil News

Updated: Aug 3, 2022



மானில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வெள்ளம் புரண்டு ஓடுகிறது.வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளை "வேண்டுமென்றே" கடந்து தங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஏழு ஓமான் குடிமக்களை ராயல் ஓமன் காவல்துறை (ROP) கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஓமான் ருஸ்டாக்கில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. அந்த வீடியோவில் அவர் வேண்டுமென்றே வெள்ளத்தில் காரை ஓட்டி செல்வதையும் ,சிறிது தூரம் சென்றதும் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையும் காட்சியையும் நாம் காணலாம்.உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டனர். பின்னர் அந்த வாகனத்தை ராயல் ஓமன் போலீசார் கைது செய்தனர்.



ருஸ்டாக் கவர்னரேட்டின் வாடி பானி காஃபிர் பகுதியில் உள்ள வாட்டர்ஹோலில் தனது வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரை தெற்கு அல்-பத்தினா கவர்னரேட் போலீஸ் கட்டளை தடுத்து நிறுத்தி கைது செய்ததாக ராயல் ஓமன் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் தண்ணீரில் சிக்கியதாகவும், அவர் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டதாகவும், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




1 Comment


Rajeshwari Raji
Rajeshwari Raji
Jul 28, 2022

👍

Like
bottom of page